அவள் அவனாகிவிட்ட
அவன் அவளாகிவிட்ட
ஒரு தேடலின் தருணத்தில்
காதலின் அரசன் காதலின் அரசியின்
இரவை நிறைக்க ஆரம்பித்தான் சிறுகேள்விகளால்
“உன் காதலின் வெப்பம் என்னை என்ன செய்யும்?”
“உன் கிரீடத்தில் மின்னும் நட்சத்திரம் என் வெப்பமே”
“அப்படியென்றால் நீ என் தாகம் தணிக்கும் நீர் இல்லையா?”
“உன் தணியா தாகத்தின் வெப்பத்தில் வெள்ளமாவேன்; அணை உடைப்பேன்”
“வெள்ளம் ஆழி சேர்ந்துவிடுமே; கரை ஒதுங்கிய நான் என்னாவேன்?”
“ஆழி நானாகும்போது கவலை ஏன்? காதலைப் பற்றிக்கொண்டு முத்துக்களைத் தேடத் தொடங்கு”
சிறுபிள்ளைபோல் காதலை அள்ளியெடுத்த காதலால்
மீட்சியடைந்தது அவ்விரவு..
நன்றி
LikeLike
அருமை
நிஜமான கற்பனை
LikeLiked by 1 person